ஆந்திர மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் அரக்கு மக்களவைத் தொகுதி மற்றும் குருபம் சட்டமன்ற தொகுதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கு தொகுதி வேட்பாளர் அப்பாலா நரசா, குருபம் தொகுதி வேட்பாளர் எம்.ராமண்ணா ஆகியோரை ஆதரித்து பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.